Posts

பார்வை ஒன்றே போதுமே 39

இந்த வருஷத்துக்கான யாங் பிசினஸ் மேன் அவார்ட் எனக்கு அனோவ்ன்ஸ் பன்னிருகாங்க. நாளைக்கு ஈவினிங் அவார்ட் ஃபங்க்ஷன் நடக்குது. நீ வந்தா நல்லா இருக்கும். உனக்கு விருப்பம் இருந்தா வரலாம் என்று சாலையில் கவனத்தை வைத்து கொண்டே அவன் கூற அவன் கூறியதை கேட்டவள் எந்த பதிலும் கூறவில்லை. அதில் ஒரு பெரு மூச்சு விட்டவன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் வண்டி ஓட்டுவதில் கவனத்தை செலுத்தினான். வீட்டின் உள் முதலில் துருவன் நுழைய அவன் பின்னே தீராவும் வந்தாள். ஆதிரன் பிசினஸ் விஷயமாக தொழில் துறை நண்பர் ஒருவரிடம் பேசி கொண்டிருக்க அபியோ மொபைலில் பப்ஜி விளையாடி கொண்டிருந்தான். அவன் மண்டையில் ஒரு கொட்டு கொட்டினான் துருவன். யாருடா அது வெண்ணெய் என்று தலையை தேய்த்து கொண்டே திரும்பி பார்க்க துருவன் தான் அவனை முறைத்து கொண்டு இருந்தான். ஏண்டா கொட்டுன பனை மரம் என்று அபியும் முறைத்து கொண்டே கேட்க இது தான் நீ வெளிய போற லட்சணமா இந்து நக்கலாக துருவன் கேட்க அயோயோ கரெக்ட்டா கேக்குறானே. இப்போ என்ன சொல்லி சமாளிக்குறதுன்னு தெரியலையே என்று திரு திருவென முழித்தவாறே அவன் யோசிக்க அவன் எதிரே உள்ள சோபாவில் அமர்ந்து அவனையே குரு குருவென பார்த்த...

பார்வை ஒன்றே போதுமே 38

இளஞ்சூரியன் காலை கதிர்களை பரப்பிக் கொண்டிருந்தது. காலையில் எழுந்த  தீரா கண்டது என்னவோ குழந்தை போல் கை கால்களை குறுக்கி கொண்டு சோபாவில் படுத்து உறங்கி கொண்டிருந்த தன்னவனை தான். அன்று திருமணம் முடிந்த இரவு அவளிடம் பேசியவன் தான். அதன் பிறகு அவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை துருவன்.  ஒரே அறையில் இருந்தாலும் அவளின் முகத்தை கூட பார்க்க மாட்டான். காலையில் எழுந்து குளித்து முடித்து ஆபீஸிற்கு கிளம்புபவன் காலையில் உணவு கூட உண்ண மாட்டான். இரவு நேரம் கடந்து வீடு வருபவன் இரவு உணவையும் எடுத்து கொள்ளலாமலே உறங்கி விடுவான். ஏதோ ஒன்றை பறிகொடுத்தவன் போல் தாடி மீசையுடன் உடல் எடை குறைந்து முகம் பொலிவிழந்து சுற்றி கொண்டிருக்கிறான்.  அவனின் இப்படி என்றால் தீரா உண்ணாமல் உறங்காமல் பித்து பிடித்தவள் போல் இருந்தாள். ஷிவண்யாவிடம் கூட சரியாக அவள் பேசுவது இல்லை. ஏதாவது கேள்வி கேட்டால் மட்டுமே பதில் கூறுவாள். அறையின் உள்ளேயே அடைந்து கிடப்பாள். இருவரும் ஏதோ ஒரு வகையில் தங்களை தானே வருத்தி கொண்டு  இருந்தனர். சூரிய வெளிச்சம் முகத்தில் பட கண்களை சுருக்கி எழுந்தான் துருவன். அவள் முழித்து  இருப்பதை உ...

பார்வை ஒன்றே போதுமே 37

ஹோட்டலில்  அமர்ந்து இருந்த கவி இத்தோடு பதினாறாவது ஐஸ்கிரீமை காலி செய்து கொண்டிருந்தாள். அவள் எதிரே அமர்ந்து கன்னத்தில் கை வைத்து அவள் உண்ணுவதை ரசித்து கொண்டிருந்தான் சூர்யா. அவளோ அங்கு ஒருவன் இருக்கிறான் என்பதையே மறந்து ஐஸ்கிரீமை கபளீகரம் செய்து கொண்டிருந்தாள். அனைத்தையும் உண்டு முடித்தவள் மாமா அடுத்து அமெரிக்கன் நட்ஸ் பிளேவர் ஆர்டர் பன்னு என்று அசால்ட்டாக கூற என்னதுஊஊஊஊ என்று கண்களை விரித்தான் சூர்யா.  ப்ச்ச் சீக்கிரம் ஆர்டர் பன்னு மாமா. நாக்குல எச்சி ஊறுது என்று அவள் சிலாகித்து கூற ஏய் பதினாறு ஐஸ்கிரீம் கம்ப்ளீட் பண்ணிட்ட டி. போதும் நிறுத்து என்று அவன் கூற இப்போ வாங்கி தர முடியுமா முடியாதா என்று அவள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கூற சரிமா தாயே வாங்கி தரேன் இரு. நீ உடனே மலை ஏறாத என்று என்றவன் தலையில் அடித்து கொண்டு  அவள் கூறியதை ஆர்டர் செய்தான். பணியாள் ஐஸ்கிரீமை எடுத்து வந்து டேபிளில் வைத்து விட்டு சென்று விட சுற்றி முற்றி பார்த்தாள் கவி. அவன் இப்போது தனி அறை டேபிளையே அவர்களுக்கு  புக் செய்து இருக்க அவள் பெரு மூச்சு ஒன்று விட்டாள். அவள் செய்வதையே வேடிக்கை பார்த்து...

பார்வை ஒன்றே போதுமே 36

ஹாலமதி ஹாபி போ பாடலுக்கு தளபதி விஜய்யின் ஸ்டேப்பை போட்டு ஆடி கொண்டிருந்தவன் அதே ஸ்டெப்போடு திரும்பினான் அபி. அப்பொழுது அங்கு ஆரோஹி உள்ளே நுழைவதை கண்டு  மார்பை கை கொண்டு மறைத்தவாறு  அயோயோஓஓஓஓ பார்த்துட்டா பார்த்துட்டா என்று ரெமோ சிவகார்த்திகேயன் பாணியில் குதியோ குதியென்று குதிக்க அவனை இடுப்பில் டவலோடு அந்த நிலையில் எதிர்பார்க்கதவள் அம்மேஏஏஏஏ என்று கண்களை இரு கைகளால் மூடியவாரு கத்தினாள் ஆரோஹி. இல்ல நான் எதுவும் பாக்கல இல்ல நான் பாக்கலா என்று இரு கைகளையும் கண்ணை மறைப்பதற்காக கைகளை மேல உயர்த்தியவள் காபி ட்ரெவை கீழே போட்டு விட அதில் இருந்த சூடான காஃபி கீழே விழுந்து  அவள் காலில் கொட்டிவிட்டது. அம்மேஏஏஏ என்று அவள் கத்த அதுவரை குதித்து கொண்டிருந்தவன் அவள் அலறலை கண்டு அவளிடம் வேகமாக ஓடி வந்தான். கீழே அமர்ந்து கண்களை கசக்கி கொண்டு அழுது கொண்டிருந்தவளை இரண்டே எட்டில் அடைந்தவன் என்ன ஆச்சு பாப்பா. ஏன் அழுகுற? என்று பதட்டத்துடன் அவன் வினவ கால்ல காஃபி கொட்டிருச்சு எரியுது என்று தேம்பி தேம்பி அழுத்தி அவள் கூற அவளை கால்களை ஆராய்ந்தான் அபி. அவள் வெண்ணெய் நிற கால்கள் சிவந்து போய் இருந்தது. ...

பார்வை ஒன்றே போதுமே 35

தான் பேச சென்று தன் தந்தையும் தாயும் நிராகரித்து விட்டால் தன்னால் தாங்கி கொள்ள முடியாது என்று  நினைத்தவன்  அமைதியாக படியேற சென்றான். துருவா என்று ஷிவண்யா அழைக்க ஒரு நிமிடம் நின்றவன் தன் பிரம்மை என்று நினைத்து கொண்டு மீண்டும் செல்ல முற்பட துருவா என்று மீண்டும் அழைத்தார் ஷிவண்யா. அவன் சட்டென திரும்பி பார்க்க அவனை நோக்கி இரு கைகளையும் விரித்து வா என்று கண்ணீருடன் அழைத்தார் ஷிவண்யா. அவன் அமைதியாக அவரை பார்த்து கொண்டே  மெதுவாக அவர் அருகில் வந்தான். அருகில் வந்தவன் அவர் கையையும் முகத்தையும் மாறி மாறி பார்த்து கொண்டிருக்க அவனின் செய்கையில் சிரித்த ஷிவண்யா அவன் முகத்தை கையில் எந்தினார். என்ன மன்னிச்சுறு துருவா. உன்னோட கஷ்டத்தை புரிஞ்சிக்காம நாங்களும் உண்ண காயப்படுத்திட்டோம். இன்னைக்கு அபி சொன்னதுக்கு அப்புறம் எங்க மேல இருக்குற தப்பு எங்களுக்கு புரிஞ்சிது. உன்னோட நிலமைல இருந்து பாக்கும் போது தான்  நீ பட்ட கஷ்டத்தை எங்களால உணர முடிஞ்சிது. எங்கள மன்னிச்சுறு ப்பா என்று ஷிவண்யா கண்ணீருடன் கூற அவர் கைகளை பிடித்து கொண்டவன் ம்மா என்ன பேச்சு இதெல்லாம். என்ன திட்டுறதுக்கு உங்களுக்கு எ...

பார்வை ஒன்றே போதுமே 34

சூர்யா ஹாலின் சோபாவில் தரையை பார்த்தவாறு  அமர்ந்து இருக்க அவன் எதிரே உள்ள இருக்கையில் அவனை உறுத்து பார்த்த விழிகளுடன் அமர்ந்து இருந்தார் தேவமாறுதன். சோ மானஸா விஷயத்துக்காக தான்  நீ கவிய கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிருக்க அப்டி தான சூர்யா என்று மாறன் அமைதியாக வினவ தலையை நிமிர்த்தாமலே ஆமென தலை அசைத்தான் . உன் மேல உனக்கே நம்பிக்கை இல்லையா டா. நீ எந்த தப்பும் பண்ணிருக்க மாட்டன்னு நீ முதல்ல நம்பிருக்கணும். எது சரி எது தப்புன்னு யோசிக்கனும். படிச்சவன் தான நீ... எதையும் யோசிக்க மாட்டியா? எல்லாத்தையும் நம்பிட வேண்டியது என்று மாறன் கோபத்தில் அவனை திட்ட டேய் அவனே நொந்து போய் இருக்கான். ஏன் மேலும் மேலும் அவனை கஷ்டப்படுத்துற என்று ஆதிரன் மாறனை அடக்க ஆமாங்க ஏதோ தெரியாம பண்ணிட்டான் விடுங்க என்று தேவான்ஷியும் சொல்ல ஆமா என்ன எல்லாரும் அடக்குங்க. இதே மாதிரி அவன் திரும்பி ஏமாந்து வந்து நின்னா அப்போ என்ன பண்ணுவீங்க என்று தேவமாறுதன் அலுத்துகொண்டார் தீரா எதுவும் பேசாமல் அமைதியாய் அமர்ந்து இருந்தாள். ஆனால் தன் அண்ணனின் வாழ்வில் இனி எந்த பிரச்னையும் இல்லை என்பது மட்டும் அவளுக்கு சற்று ஆறுதல் க...

பார்வை ஒன்றே போதுமே 33

தன்னவன் பேசி சென்ற வார்த்தைகள் அவளுக்கு மனதை வலிக்க செய்ய  அதற்கு மேல் அறையில் இருக்க விருப்பம் இல்லாதவள் கீழே வந்தாள். அனைவரும் ஒன்றாக நின்று பேசி கொண்டிருப்பது தெரிய வர வந்தவள் ஷிவண்யாவின் அருகில் சென்று நின்றாள்.  அப்பொழுது மாமா நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் என்று சூர்யா கூற அவன் என்ன சொல்ல போகிறான் என்று உணர்ந்த துருவன் கண்களை சுழல விட அவன் கணித்தது போல் அங்கு நின்று கொண்டிருந்தாள் மானஸா.....  இன்று அனைத்தை உண்மைகளையும் அனைவரிடமும் கூறி விட வேண்டும் என்று நினைத்தவன் மானஸாவை வரவழைத்து இருந்தான். என்ன விஷயம் சூர்யா... மேரேஜ் அரேஞ்சமெண்ட்ஸ் ஏதாவது சேன்ஞ் பன்னனுமா என்று மாறன் கேட்க எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை ப்பா என்றான் சூர்யா........... அவனின் வார்த்தையில் அனைவர் முகமும் அதிர்ச்சியை தத்தெடுத்து. சூர்யா என்ன பேசிட்டு இருக்க என்று மாறன் அதட்ட நான் பேசி முடிச்சிடுறேன் ப்பா. இதுக்கு அப்புறம் பேச வாய்ப்பு இருக்குமானு எனக்கு  தெரியல என்று சூர்யா கூற மாறன் ஏதோ சொல்ல வர அவரை தடுத்த ஆதிரன் நீ என்ன பேசனுமனு நினைக்குறியோ அதை பேசு சூர்யா. யாரும் உண்ண இங்க த...