Posts

Showing posts from March, 2023

எனக்கெனவே நீ பிறந்தாய் 11

இங்கு ஒரு பாழடைந்த குடோனில் உடல் முழுவதும் ரத்தம் வழியும் நிலையில் ஒரு தூணில் கட்டப்பட்டிருந்தான் ஒருவன். அப்பொழுது உள்ளே நுழைந்த ஒரு உருவம் அவனின் முன்னாள் போட பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தது.சுற்றி இருந்த கார்ட்ஸில் ஒருவனிடம் கண்ணை காட்ட கட்டப்பட்டிருந்தவன் மீது ஐஸ் கட்டிகள் நிறைந்த குளிர்ந்த நீர் ஊற்றப்பட்டது. தன் மேல் நீர் விழுந்தவுடன் மூச்சித்தினறி கண்விழித்தான் விஷ்வா. கண்கள் மங்கலாக தெரிய தன் எதிரில் இருந்த உருவத்தை பார்க்க முயற்சி செய்துகொண்டிருந்தான். என்ன மிஸ்டர் விஷ்வா. எப்டி இருக்கீங்க என்று அந்த உருவம் வினவ அது  யாரென தெரியாமல் விழித்து கொண்டிருந்தான் விஷ்வா. ஏய் யார் நீ. எதுக்கு என்ன கடத்திட்டு வந்துருங்க. என்னோட அப்பாக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சிது உன்ன நாசம் பண்ணிடுவாறு என்று கத்தினான் விஷ்வா. அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே உள்ளே வந்த யதர்வ் அவன் கூறிய வார்த்தைகளை கேட்டு அவன் முகத்தில் ஓங்கி குத்தினான்.அதில் அவன் பற்கள் உடைந்து ரத்தம் கொட்டியது. அவன் வலியில் அலற அட என்ன கமிஷனர் சார். டக்குனு இப்டி பண்ணிடீங்க. அதான் நா பேசிட்டு இருக்கேன்ல. நீங்க கொஞ்சம் அம...

எனக்கெனவே நீ பிறந்தாய் 10

மறுநாள் விடியலில் முதலில் விழித்த வன்ஷி தன் அருகில் தூக்கத்தில் கூட தன்னை விடாது  அணைத்து  உறங்கும் மாறனை பார்த்துக்கொண்டிருந்தாள். தந்தையும் மகனும் உறங்கும் அழகை ரசித்தவள் அவனிடம் இருந்து பிரிந்து குளியலறை புகுந்தாள். குளித்து முடித்து தலையில் ஈரம் சொட்ட சொட்ட ஒரு டவலை தலையில் கட்டிக்கொண்டு மெல்லிய சிகப்பு நிற காட்டன் புடவையை அணிந்து கொண்டு வெளியே வந்தவள் அப்பொழுது ஒரு காட்சியை கண்டு அப்படியே நின்றாள். அங்கு மாறனின் கட்டை விரலை தன் வாயில் வைத்து சப்பியவாரே அவன் மார்பின் மேல் உறங்கிக் கொண்டிருந்தான் சூர்யா. அதை பார்த்த வன்ஷிக்கு சொல்லமுடியா உணர்வு மனதை தாக்கியது. தலையை தட்டி நினைவுக்கு வந்தவள் கண்ணாடி முன்பு நின்று தலையை காய வைக்க ஆரம்பித்தாள். இரண்டு பக்க முடி எடுத்து அதை சிறு கிளிப்பில் அடக்கியவள் மஞ்சள் தாலியை சேலையினுள் போட்டு கொண்டாள். நெற்றியில் சிறு போட்டு ஒன்றை வைத்தவள் கண்ணில் மை வைத்தாள். பின்பு நெற்றி வகுட்டில் குங்குமம் வைக்க செல்லும் போது ஒரு கரம் பின்னிருந்து அவள் இடையை சுற்றி வளைத்து அவளை அணைத்துக்கொண்டது. அந்த கரத்திற்கு உரிமையானவனை அறிந்து கொண்ட வன்ஷி கண்ணாடி ...

எனக்கெனவே நீ பிறந்தாய் 9

மாறன் தேவான்ஷியின் வரவேற்பு நிகழ்ச்சி ஆட்டம் பாட்டத்துடன் மகிழ்ச்சியாக முடிந்தது. இரவு மாறனின் அறையில் முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ரூமை  தியாஷும், வதிகாவும் அலங்காரம் செய்து கொண்டிருக்க யதர்வ் இதற்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் சேரில் அமர்ந்து போனை நோண்டிக்கொண்டிருந்தான். தியாஷ் பூவை தூக்கி வதிகாவின் மீது போட அவள் அவனை போலியாக முறைத்தாள். மீண்டும் பூவை தூக்கி அவள் மீது போட அவளும் பதிலுக்கு அவன் மீது பூவை எறிந்தாள். அவர்கள் இருவரும் இவ்வாறு விளையாடி கொண்டிருக்க அப்பொழுது உள்ளே நுழைந்த தேவமாறுதன் இவர்கள் செய்யும் கூத்தை பார்த்து இங்க என்னடா நடக்குது என்ற ரீதியில் இவர்களை பார்த்துக் கொண்டிருந்தான். பின்பு தியாஷிடம் வந்தவன் அவன் கையில் இருந்த பூ கூடையை அவன் தலையில் கவிழ்த்துவிட்டான். இதை பார்த்த வதிக்கா குலுங்கி குலுங்கி சிரிக்க அடேய் வீணா போனவனே. ஏன்டா இப்டி பன்ன? என்று மூச்சு வாங்க முறைத்தான் தியாஷ் . ஏன்டா டேய் எனக்கு பர்ஸ்ட் நைட்க்கு ரெடி பண்ணுங்கடான்னா இவன் ஒருத்தன் போன நோண்டினு இருக்கான். நீங்க ரெண்டு பேரும் விளையாடினு இருக்கீங்க. இங்க என்னடா நடக்குது ...

எனக்கெனவே நீ பிறந்தாய் 8

மாறன் தேவான்ஷியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன்னவள் ஆகிக்கொண்டான். அனைவரும் அட்ச்சதை தூவி ஆசிர்வதித்தனர். அவள் நெற்றி வகுட்டில் குங்குமம் இட்டவன் அவள் நெற்றியில் இதழ் பதித்தான். அவள் ஏதோ ஒரு மயக்கத்தில் அதை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டாள். பின்பு இருவேறு அக்கினியை சுற்றி வந்தனர். மாறனிற்கு முன்ப சூர்யா குட்டி அவன் விரலை பிடித்தவாறு அவனும் சேர்ந்து அக்கினியை சுற்றினான். தன்னவள் பட்டு பாதத்தை தன் தொடை மீது வைத்து அவள் விரலில் முத்தமிட்டு மெட்டியை அவளுக்கு அணிவித்தான். இதனை பார்த்த ஓவென கத்தி ஆர்பரித்தனர். பின் ராகவன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க அவர் ஆனந்த கண்ணீருடன் இருவரையும் ஆசிர்வதித்தார். பின்பு கோவில் சன்னிதானத்தில் முருகரை வணங்கிவிட்டு அனைவரும் மாறனின் வீட்டிற்கு காரில் புறப்பட்டனர். வீட்டை அடைந்தவுடன் வேகமாக உள்ளே சென்ற வதிக்காவும் ஆராத்யாவும் ஆரத்தி தட்டுடன் வெளியே வந்தனர். சூர்யாவை தூக்கி கொண்ட தேவமாறுதன் தன் மனையாளின் தோல் மீது கைபோட்டு தன்னுடன் சேர்த்துக்கொண்டான். அதன் பின்பு மூவருக்கும் சேர்த்து ஆரத்தி எடுக்கபட்டது. தேவமாறுதனின் வீட்டினுள் நுழைந்த தேவான்ஷியின் மனதில் “...

எனக்கெனவே நீ பிறந்தாய் 7

D.V இண்டஸ்ட்ரீஸ், தியாஷ்: மேம் நா உங்க கிட்ட கொஞ்சம் பர்ஸ்னலா பேசலாமா? தேவான்ஷி: சொல்லு தியாஷ். என்ன விஷயம். தியாஷ்: மேம் அது வந்து.... தேவான்ஷி: கால் மீ ஸ்ரீ. இப்போ நா உன்னோட பிரிண்ட். உன்னோட பிரிண்ட நீ எப்டி கூப்டுவன்னு உனக்கு மறந்துருச்சா என்ன? என்று புருவத்தை உயர்த்தி கேட்டாள் வன்ஷி. அதை மறக்க முடியுமா என்ன என்று சிரித்தவன் ஸ்ரீ நா உன் கிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும் என்றவன் வதிக்காவை பற்றியும் அவளுக்கு தீரனால் நடந்த கொடுமைகள் பற்றியும் கூறினான். கொதித்தெழுந்து  விட்டாள் வன்ஷி. மீண்டும் ஒரு பெண்ணின் வாழ்வு தீரனால் சிதைக்க பட்டுவிட்டதா என்பதை அறிந்தவளுக்கு கோவத்தை கட்டுப்படுத்த தெரியவில்லை. அனைத்து பொருட்களையும் கீழே தள்ளி உடைத்தவள் மூர்க்கமாக கார்டெயின்கள் முதற்கொண்டு அனைத்தையும் கிழித்து எறிந்தாள். தியாஷிற்கு அவளை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியவில்லை. அவளை பிடித்து இழுத்து சோப்பாவில் உட்காரவைத்தவன் ஸ்ரீ ரிலாக்ஸ் .கன்ட்ரோல் யூவர் செல்ப். நீ இப்டி கோபப்படுறதுனால ஒரு ப்ரோயோஜனமும் இல்ல.நம்மளோட ஏய்ம் இப்போ தீரன கொல்றது மட்டும் தான் அதை முதல்ல செஞ்சி முடிப்போம் என்ற தியக்ஷய் ...

எனக்கெனவே நீ பிறந்தாய் 6

அபி தீரனால் வர போகும் ஆபத்தை அறியாமல் தன் மகனை ஆசையுடன் ரசித்துக்கொண்டிருந்தாள் தேவான்ஷி. ஃப்னீக்ஸ் மால், ப்பா இது வேணும் ப்பா அது வேணும் ப்பா அது வாங்கி கொது. ப்பா இத வாங்கி கொது என்று தன் தோளில் அமர்ந்து  மூச்சிற்கு  மூண்ணுறு முறை தன்னை அப்பா அப்பா என்று அழைக்கும் சூர்யாவை பார்க்கும் பொழுது மாறனிற்கு பாசம் அலை கடலென அவன் மீது உருவாகியது. அவன் கேட்பதை எல்லாம் முகத்தில் தவழ்ந்த சிரிப்புடன் கொஞ்சமும் முகம் சுழிக்காது வாங்கி தரும் மாறனை பார்க்கும் பொழுது தன்னுள் எழும் சொல்ல முடியா உணர்ச்சியை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் திணறினாள் தேவான்ஷி. பின்பு மூவரும் பீச்சிற்கு சென்றனர். அம்மா அங்க போதாம் கடலை காட்ட செல்லம் அங்க வேணாம்டா. தண்ணில விளையாடுனா உனக்கு சளி புடிச்சுக்கும் என்று தேவான்ஷி கூற ப்பா நீ அம்மாட்ட சொல்லு. நம்ம போதாம் போதாம் என்று சூர்யா அடம்பிடிக்க நா பாத்துக்குறேன் ஜானு யூ டோன்ட் வரி என்று கூறியவன் சூர்யாவை தூக்கி கொண்டு கடல் அலையில் விளையாட துவங்கினான். குழந்தையோடு குழந்தையாய் விளையாடும் தன் மன்னவனை அவளையும் அறியாமல் ரசித்து கொண்டிருந்தாள் பேதை. விளை...

எனக்கெனவே நீ பிறந்தாய் 5

தேவமாறுதன் தேவான்ஷியின் திருமணத்தை மிக பெரிய அளவில் விமர்சையாக செய்ய வேண்டும் ராகவன் கூற அதற்கு மறுப்பு தெரிவிக்கிறாள் வன்ஷி. தேவான்ஷி: ப்பா எங்க கல்யாணம் சிம்பிள்ளா ரிஜிஸ்டர் ஆபிஸ்ல பன்னிடலாம்.  அனைவரும் எதற்கு இவள் இவ்வாறு கூறுகிறாள் என்று புரியாமல் இருக்க யதர்விற்க்கோ கோவம் உச்சம் கொண்டு இருந்தது. ராகவன்: ஏன்மா. ஏன் சிம்பிள்ளா பன்ன சொல்ற. நீ என்னோட ஒரே பொன்னு.உன்னோட கல்யாணத்தை பெரிய அளவுல பண்ணனும்னு எனக்கு ஆசை இருக்காதா? வன்ஷி:எனக்கு உங்கா ஆசை புரியுதுப்பா. ஆனா இப்போ நீங்க கல்யாணத்தை பெரிய அளவுல பன்ன நினைச்சா எங்க கல்யாணம் நடக்க குறைஞ்சது ஒரு மாசத்துக்கு மேல ஆகும். என்னால அதுவரைக்கும் அவரை பிரிஞ்சி இருக்க முடியாதுப்பா. ஆதான் அப்டி சொன்னேன். தப்பா சொல்லிருந்தா சாரிப்பா. அவளின் இந்த வார்த்தைகளை  கேட்ட  தேவமாறுதனுக்கு  வானில் பறப்பது போல இருந்தது. என்னவள் இந்த அளவிற்கு  தன்னை நேசிக்கின்றாளா? என்று காதல் கொண்ட மனம் அறிவிழந்து இழந்து யோசித்தது. ராகவன்: இதுல தப்பா நினைக்க என்னடா இருக்கு.நீ சொன்ன இந்த ஒரு வார்த்தை மூலமே நீ அவரு மேல வச்சிருக்க அளவுகடந்த அன்ப புரிஞ்சி...

எனக்கெனவே நீ பிறந்தாய் 4

தீரன் சென்றவுடன் தன் தந்தையிடம் பேச தொடங்கினாள் தேவான்ஷி தேவான்ஷி:  அப்பா நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். ராகவன்: சொல்லுமா என்ன விஷயம். தேவான்ஷி: அப்பா நா உங்க கிட்ட சொல்லாம ஒரு விஷயம் பன்னிட்டேன். ராகவன்: என்னமா என்ன சொல்ற. எதுவா இருந்தாலும் அப்பாகிட்ட தயங்காம சொல்லு. தேவான்ஷி: ப்பா உங்களுக்கு தேவமாறுதன் தெரியும்ல ப்பா? ராகவன்: யாரு அந்த M.A group of company எம். டி தேவமாறுதனா? தேவான்ஷி: ஆமா ப்பா அவருதான். அநேரம் பார்த்து சூர்யா படிகளில் இருந்து அம்மா என்ற கூவளுடன் ஓடி வந்து தன் தாயின் கால்களை கட்டிக்கொண்டான். தேவான்ஷி: ஹேய் செல்லம். மம்மு சாப்டீங்களா? சூர்யா: ஓஓஓ. சாப்பித்தேனே. தாதா ஊத்தி வித்தாரு. தேவான்ஷி: என் சமத்து குட்டி. சூர்யா: ஆமா ஆமா. நா தான் சமத்து. சூர்யா செல்லம் எப்போமே சமத்து தான். அதுல என்ன சந்தேகேம் என்று சூர்யாவை செல்லம் கொஞ்சினார் ராகவன். ஐ  ஜாலி ஜாலி தாதாவும் என்ன சமத்துன்னு சொல்லுதாறு. ஜாலி என்ன துள்ளியவனின் கன்னத்தில் இதழ் பதித்தாள் வன்ஷி. பதிலுக்கு அவள் கன்னத்தை எச்சிலாகினான் சூர்யா. ம்மா அப்பா வேணும் என்று சூர்யா கேட்டவுடன் அதிர்ந்...

எனக்கெனவே நீ பிறந்தாய் 2

காலையில் விழித்த வன்ஷி தன் மார்பின் மேல் உறங்கும் தன் ஆசை மகனை ரசித்தவள் அவன் நெற்றியில் முத்தமிட அவன் தூக்கத்திலேயே சிரித்தான். அவனை மெத்தையில்  உறக்கம் களையாதவாறு கிடத்தியவள் எழுந்து குளித்து தன்னை சுத்தப்படுத்தி கொண்டு தயார் ஆகியவள் இன்னும் விழிக்காமல் உறங்கி கொண்டிருக்கும்  தன் மகன் அருகில் அமர்ந்தா உறங்கும் போது குட்டி கண்ணனை போல துயில் கொண்டிருக்கும் தன் ஆசை செல்வதை அனு அணுவாய் ரசித்துக்கொண்டிருந்தாள் மடந்தை. நேரத்தை கவனித்தவள் அவனை மெதுவாக எழுப்பினாள். வன்ஷி: செல்லகுட்டி எழுந்திரிங்க. டைம் ஆகிடுச்சு. பட்டு பையன் இப்போ எழுந்து சமத்த அம்மா கிட்ட குளிச்சிட்டு குட் பாய்யா சாப்பிட்டா அம்மா ஈவினிங் செல்லக்குட்டிய வெளியகூட்டிட்டு போவேன். அவள் பேச ஆரம்பிக்கும் போது சிணுங்கி கொண்டே எழுந்து அவள் தோளில் முகம் புதைத்தவன் அவள் பார்க்கிற்கு அழைத்துச் செல்வேன் என்று கூறியவுடன் விழிவிரித்துப் பார்த்தான்.  பின் தன் அரிசிப்பல் தெரிய கன்னகுழியுடன் அழகாய் சிரித்தவனை முத்த மழை பொழிந்து பாத்ரூம் தூக்கி சென்றவள் அவனை குளிக்க வைக்க ஆரம்பித்தாள். வெந்நீர் மேலே பட்டவுடன் துள்ளி குதித்தவன் க...

எனக்கெனவே நீ பிறந்தாய் 1

  மாளிகை போன்ற அந்த நான்கு மாடி கட்டிடம் பளிச்சென்ற தோற்றத்துடன் வீற்றிருந்தது. வேலையாட்க்கள் மட்டுமே  நூற்றுக்கு மேற்பாட்டோர் இருப்பர். சுற்றி எத்திசையில் பார்த்தாலும் பச்சை பசேலென வீட்டை சுற்றி தோட்டம். தோட்டத்திற்கு நடுவில் அந்த மாளிகை அமைந்துள்ளது. காம்பவுண்டில் காரின் ஹாரன் சத்தம் கேட்க காவலாளி ஓடி சென்று கதவை திறந்தான். கிட்டத்தட்ட இருபது கார்கள் வீட்டுக்குள் நுழைய வெளியில் வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் அத்தனை வேலைகளையும் விட்டுவிட்டு காரின் அருகில் பணிவுடன் நின்றனர். முதலில் இறங்கிய காவலாளி ஒருவன் ஒரு காரின் கதவை திறந்துவிட அதிலிருந்து ஒரு பெண் இறங்கினாள். கண்ணில் ஒரு திமிர், சிரிக்க மறந்த உதடுகள் எப்பொழுதும் கோபம் குடிகொண்டிருக்கும் உணர்வுகள் துடைத்த முகம், ஒருவரை பார்த்த உடன் எடை போடும் குணம் முழுதாக சொல்ல வேண்டுமென்றால் மனித உருவில் உள்ள ஒரு லேடி ரோபோர்ட். அவள் தேவான்ஷி. இவளின் இந்த குணம் இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் அவளிடம் வந்தது. இதற்கான காரணம் ? இனி வரும் காலங்களில் அறிவோம். அவளுக்கென்று அவளை பாதுகாக்க எப்பொழுதும் அவளை சுற்றி நூறு கார்ட்ஸ் இருப்பர்....