Posts

பெண் கவிதை 40

ஆரன் மொத்தமாய் அவளிடம் கூறி முடிக்க அதை கேட்ட யட்சிணிக்கு மனம் கனத்து போனது அதிலும் தன் கணவன் வேறொரு பெண்ணுடன் ஊனாய் உருகி அவளுடன் காதலில் கசிந்துருக்கி வாழ்ந்துள்ளான் என்பதை காதால் கேட்க கேட்க அவளுக்கு மனம் ரணமாய் வலித்தது. கலங்கிய கண்களை மறைக்க பெரும் பாடு பட்டு மனதில் உள்ள ரணத்தின் விளைவால் வெளியே கேவலாய் வந்து அழுகையை கூட அடக்கிக் கொண்டு அமைதியாக நின்று இருந்தாள் யட்சிணி. ஆரன் தலையை இறுக்கி பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவன் "அன்னைக்கு நாங்க ரெண்டு பேரும் காதலோட தான் இணைந்தோம் மாயா கல்யாணத்துக்கு முன்னாடி நாங்க தப்பு பண்றோம்னு எங்க மனசுல ஒரு துளி கூட என்ன வரவே இல்ல ஏன்னா நான் கண்டிப்பா அவளை கல்யாணம் பண்ணிக்குவேன் என்ற நம்பிக்கை எனக்கும் இருந்தது அவளுக்கும் இருந்தது. ஆனா அதுதான் அவளை கடைசியாக பார்க்க போற நாள்ன் தெரிஞ்சு இருந்தா கண்டிப்பா நான் அவளை விட்டுட்டு வந்து இருக்கவே மாட்டேன் என்கூடவே அவளை எங்க கூட்டிட்டு வந்து இருப்பேன் அதுதான் நான் பண்ண மிகப்பெரிய தப்பு" என்று கூறும் பொழுதே அவன் குரலில் வேதனை அப்பட்டமாய் வெளிப்பட்டது  "இவன்தான் உங்க பையனும் உங்களுக்கு எப்படி த...

பெண் கவிதை 39

காலை வேளையில் கயல் கூறியதன் பேரில் ஆரனின் அறைக்கு காப்பியை எடுத்துக் கொண்டு சென்றாள் பயத்துடன் யட்சிணி. எவ்வளவோ தான் செல்ல மாட்டேன் என்று கூறியும் கயல் தான் அவளை வற்புறுத்தி அனுப்பி வைத்தாள் "இங்க பாரு யட்சணி நீ இப்படி பயந்துகிட்டே இருந்தா அவனை மாத்த முடியாது என் பையன் பழையபடி மாறணும் அது உன்னால மட்டும் தான் முடியும் தயவு செஞ்சு கிடைக்கிற வாய்ப்பு பயன்படுத்திக்காமல் இப்படி முட்டாளாவே இருக்காத நீ ரொம்ப நல்ல பொண்ணு உன்னோட நல்ல மனசுக்கு நீ நல்லபடியா வாழனும்னு ஆசைப்படுகிறேன் அதுவும் என் பையன் கூட வாழனும்னு இருந்தா அதைவிட சந்தோஷம் இந்த உலகத்துல எனக்கு வேற எதுவுமே இல்ல தயவு செஞ்சு அவனை விட்டு பயத்துல விலகி இருக்காமல் கொஞ்சம் கொஞ்சமா அவனை நெருங்க முயற்சி பண்ணு" என்று கயல் கூற அதற்கு மேல் அவளை எதிர்த்து பேசாமல் சரி என்று தலையசைத்து விட்டு ஆரன் அறைக்குள் நுழைந்தாள் பெண்ணவள்  அங்கு ஆரன் இல்லாமல் போகவே "எங்க போனாரு இவரு ஆளையே காணோம்" என்று யோசித்துக்கொண்டே இருந்தவள் டேபிளின் மீது காபியை வைத்துவிட்டு அறையில் அவன் இருக்கிறானா என்று தேடத் தொடங்கினாள் அப்போது தான் அவனின் வாட்ரோப் ...

பெண் கவிதை 38

ஆருரன் கூறிய செய்தியை கேட்டு ஆரன் பித்து பிடித்தவன் போல் அப்படியே அமர்ந்திருக்க தன் மகனின் நிலை உணர்ந்து வாயில் முந்தானையை வைத்து அழுகையை அடக்கினாள் கயல்விழி .ஆனால் இப்பொழுது அழுவதனால் எந்த பிரயோஜனமும் இல்லை அனைத்தையும் அவனிடம் கூறி விட வேண்டும் என்ற நோக்கத்தில் தன் கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டவள் "உன் அப்பா சொன்னதுதான் உண்மை உனக்கு ஆக்சிடன்ட் ஆனா அன்னைக்கே உன்னோட வேலையும் உன்னை விட்டு போயிடுச்சு  இந்த விஷயம் உனக்கு தெரிஞ்சா நீ தாங்க மாட்டன்னு என்று தான் தன் மேல பழிய போட்டுக்கிட்டாரு உன் அப்பா. அவங்க உன்ன டிஸ்மிஸ் பண்ண ஆர்டர் நம்ம கைக்கு வந்து சேர்றதுக்கு முன்னாடி நீயே வாண்டடா முன் வந்து வேலையே வேண்டாம் என்று ரிசைன் பண்ண மாதிரி இருக்கணும்னு அன்னைக்கு உன்கிட்ட ரிசைனிங் லெட்டர்ல கையெழுத்து வாங்கி அவங்களுக்கு அனுப்பி வச்சிட்டாரு அதனாலதான் நீயா விருப்பப்பட்டு வேலையை விட்டு வெளியே போனான் என்று எல்லாரும் நினைச்சுக்கிட்டு இருக்காங்க. நீ உயிரா நெனச்சா உன்னோட வேலைய உங்கிட்ட இருந்து பரிச்சிட்டாங்கன்னு தெரிஞ்சா உன்னால அதை ஏத்துக்க முடியாதுன்னு தான் இப்படி ஒரு முடிவு எடுத்தாரு அதுலயும் உனக்...

பெண் கவிதை 37

ஆரன் பின்னே வேகமாய் ஓடினாள் கயல்விழி. அவளின் அழுகையை கண்டு தஷிகாவும் அவ் பின்னே   சென்றுவிட ரோகன் வித்யூத் மற்றும் யுதிக்கு அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை மான்வித்ரா "என்னங்க இது அவர் இப்படி போட்டு ஆரன அடிச்சிட்டாரு அவன் உடம்பு எல்லாம் எவ்வளவு ரத்தம் வருதுன்னு பார்த்தீங்க தான? என்னதான் கோவம் இருந்தாலும் இப்படியா பண்றது முதல்ல என்ன நடந்தது ஏது நடந்ததுன்னு தெளிவா அவன்கிட்ட கேட்டுட்டுதான அடுத்து நாம முடிவு எடுக்கணும் இப்படியா கை நீட்டுவது. அதுவும் தோளுக்கு மேல வளந்த பிள்ளையஸ்" என்று மான்வித்ரா கண்ணீருடன் கூற யாஷஷ்வியோ "வரட்டும் இன்னைக்கு அண்ணவ நான் என்னன்னு கேட்கிறேன் எவ்வளவு தைரியம் இருந்தா அவன் மேல கை வைப்பாரு. நம்மளோட உயிரே அவன் தான்னு அவருக்கு நல்லா தெரியும். அப்படி தெரிஞ்சும் அவன் மேல போய் கை வச்சுருக்காரு. நான் ஈவினிங் அவர்கிட்ட பேசிக்கிறேன்" என்று கோபத்துடன் கண்ணீரை துடைத்த வண்ணம் அவள் கூற "யாஷ் அமைதியா இரு. முதல்ல கோபத்தை கண்ட்ரோல் பண்ணு" என்றான் கண்டிப்பான குரலில் ரோகன். "என்ன அமைதியா இருக்கணும் இதுக்கு மேல என்ன அமைதியா இருக்கணும்? பார்த...

பெண் கவிதை 36

ஆரன் பின்னே வேகமாய் ஓடினாள் கயல்விழி. அவளின் அழுகையை கண்டு தஷிகாவும் அவ் பின்னே   சென்றுவிட ரோகன் வித்யூத் மற்றும் யுதிக்கு அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை மான்வித்ரா "என்னங்க இது அவர் இப்படி போட்டு ஆரன அடிச்சிட்டாரு அவன் உடம்பு எல்லாம் எவ்வளவு ரத்தம் வருதுன்னு பார்த்தீங்க தான? என்னதான் கோவம் இருந்தாலும் இப்படியா பண்றது முதல்ல என்ன நடந்தது ஏது நடந்ததுன்னு தெளிவா அவன்கிட்ட கேட்டுட்டுதான அடுத்து நாம முடிவு எடுக்கணும் இப்படியா கை நீட்டுவது. அதுவும் தோளுக்கு மேல வளந்த பிள்ளையஸ்" என்று மான்வித்ரா கண்ணீருடன் கூற யாஷஷ்வியோ "வரட்டும் இன்னைக்கு அண்ணவ நான் என்னன்னு கேட்கிறேன் எவ்வளவு தைரியம் இருந்தா அவன் மேல கை வைப்பாரு. நம்மளோட உயிரே அவன் தான்னு அவருக்கு நல்லா தெரியும். அப்படி தெரிஞ்சும் அவன் மேல போய் கை வச்சுருக்காரு. நான் ஈவினிங் அவர்கிட்ட பேசிக்கிறேன்" என்று கோபத்துடன் கண்ணீரை துடைத்த வண்ணம் அவள் கூற "யாஷ் அமைதியா இரு. முதல்ல கோபத்தை கண்ட்ரோல் பண்ணு" என்றான் கண்டிப்பான குரலில் ரோகன். "என்ன அமைதியா இருக்கணும் இதுக்கு மேல என்ன அமைதியா இருக்கணும்? பார்த...

பெண் கவிதை 35

மாலை வேலை அனைவரும் வெளியே கிளம்புவதற்காக தயாராகி இருந்தனர் ஆருரன் கம்பெனிக்கு செல்ல வேண்டும் என்று கூறியிருக்க கயல்விழி அவனிடம் தாம் தூம் என்று குதித்துக் கொண்டிருந்தாள் கோபத்தில். "என்னதான் நினைச்சுகிட்டு இருக்கீங்க நீங்க? காலையில தஷி அவ்வளவு சொல்லியும்  கேட்காம ஆபீஸ்க்கு போகணும்னு சொல்றீங்க நீங்க போறதும் இல்லாம ஆருத்ரனையும் கூட கூட்டிட்டு போறேன்னு சொல்றீங்க எல்லாரும் குடும்பமா வெளியே போலாம்னு தான பிளான் பண்ணி இருந்தோம். இப்ப திடீர்னு இப்படி பேசினா என்ன அர்த்தம்?" என்று அவள் கோபமாய் கத்திக் கொண்டிருக்க "நல்லா கேளுங்க அக்கா இவங்களுக்கு எப்ப பாத்தாலும் ஆபீஸ் ஆபிஸ். அது மட்டும் தான் முக்கியமா படுது. நம்ம எல்லாம் தெரியவே மாட்டேங்குற இவங்க கண்ணுக்கு" என்று தியூதா ஒருபுறம் அங்கலாய்த்து கொண்டிருந்தாள்  அப்போது தயாராகி கீழே வந்த ஆரன் இவர்கள் கத்தல் சத்தத்தை கண்டு புருவம் சுருக்கிவாறு அவர்களை பார்க்க தஷிகாவோ சோகமாக கன்னத்தில் கை வைத்துக் கொண்டு ஹால் சோபாவில் அமர்ந்திருந்தவள் தான் அண்ணன் வந்தவுடன் வேகமாய் அவனை நோக்கி சென்றாள் அவள் தன் அருகே வந்தவுடன் அவள் தோள்மேல் கை போட்டு ...

பெண் கவிதை 34

கரிகால் ஆரனை வீட்டிற்குள் ஆரத்தி எடுத்து அழைத்துச் சென்றனர் அனைவரும் வீட்டிற்குள் நுழைந்தவன் ஹால் ஷோபாவில் கை கால்களை விரித்துக்கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான். அவன் அருகே சென்று அமர்ந்த ஆரூரன் அவன் தொடையில் தட்டி "என்னடா பப்பரப்பபேன்னு உட்காருற. ஒழுங்கா போய் குளிச்சிட்டு வா உன் அம்மா உனக்காக பார்த்து பார்த்து சமைச்சு வச்சிருக்கா சீக்கிரம் வந்து எல்லாத்தையும் சாப்பிடு" என்று அவன் கூற "இருங்கப்பா சுத்தமா என்னால முடியல அவ்வளவு தூரம் ட்ரைன்ல டிராவல் பண்ணி வந்தது பயங்கர டயர்டா இருக்கு கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போற" என்றால் அவன் கண்களை மூடியவாறு அவன் கூறியதை கேட்டு அவன் தலையை கோதிய கயல்விழி "இல்லனா கீழ இருக்குற வேற ஒரு ரூம்லயாவது போய் ரெப்ரஷ் ஆகிட்டு வா கண்ணா எவ்வளவு நேரம் தான் இப்படியே சாப்பிடாம இருப்ப வயிறு காயுது பாரு" என்றாள் ஒரு தாயின் உண்மையான பரிதவிப்புடன். அவள் கூறியதைக் கேட்டு விழிகளை திறந்து பார்த்து ஒரு சிறு சிரிப்பை உதித்தவன் "10 நிமிஷம் ம்மா" என்றான் கண்களை சுருக்கி. ஆனால் அதிலும் ஒரு கம்பீரம் இருந்தது  ஆருத்திரனோ "இன்னைக்கு என்ன...