Posts

பெண் கவிதை 48

"பெரிய மாமா தம்பிய தோட்டத்துக்கு கூட்டிட்டு போயிருக்காரு" என்று யட்சிணி மெல்லிய குரலில் கூற "பெரிய மாமாவா?" புருவம் சுருக்கினான் அவள் கூறியதை கேட்டு ஆரன்  "ஆமா நான் தான் என் பேரனை தூக்கிட்டு போனேன் இதுல என்ன தப்பு இருக்கு?" என்று கூறியவரே குழந்தையை தன் கரங்களில் ஏந்தியவாறு வீட்டிற்குள் மீண்டும் நுழைந்தான் ஆரூரன். தன் தந்தையின் குரலில் அவன் தான் தன் மகனை வைத்திருக்கிறான் என்பதை உணர்ந்தவன் எதுவும் கேள்வி கேட்டுக்கொள்ளவில்லை அதற்கு மேல். அவன் அருகே இருந்த இருக்கையில் தன் பேரனுடன்  வந்து அமர்ந்த ஆருரன் அவனை தன் மடியில் அமர வைத்துக் கொண்டு "இவனுக்கு சாப்பிடறதுக்கு ஏதாவது கொடுத்தீங்களா?" என்றான் அவன் தலைமுடியை சரி செய்த வண்ணம். குழந்தையோ தன் தந்தையை கண்டவுடன் அவனிடம் தாவ முயற்சி செய்து கொண்டிருக்க "இருடா டேய் இவ்வளவு நேரம் என்கிட்ட தானே இருந்த உன் அப்பனை பார்த்த உடனே அவன் கிட்ட தாவுற கொஞ்ச நேரம் என் கூட இரு அப்புறம் உங்க அப்பாகிட்ட போ" என்று குழந்தையை பார்த்து ஆரூரன் கூற அவன் என்ன கூறுகிறான் என்று தெரியாமல்  மலங்க மலங்க அவனைப் பார்த்து விழித்...

பெண் கவிதை 47

குழந்தையின் நெஞ்சில் மென்மையாக தட்டிக் கொடுத்த வண்ணம் அவன் உறங்கும் அழகைதான் ரசித்துக்கொண்டிருந்தாள் யட்சிணி. சீக்கிரமாக இவன்  பிரச்சனையை சரி செய்ய வேண்டும் இனி இவனுடன் முழுவதுமாக நேரம் செலவழித்து இவன் பேச்சுத்திறனை வெகு விரைவில் கொண்டு வர வேண்டும் என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்டவள் குழந்தையின் முகத்தையே விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டிருக்க குழந்தைக்கான உணவை எடுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்த கயல்விழி "என்ன யட்சிணி தம்பி முகத்தையே பாத்துட்டு இருக்க என்ன ஆச்சு?" என்று கேட்டுக் கொண்டே அவள் அருகே சென்று அமர வேகமாக தன் கண்களில் ஓரம் துளிர் கண்ணீரை துடைத்துக் கொண்டாள் கயல்விழி பார்த்துவிடக் கூடாது என்று நோக்கத்தில்  ஆனால் சரியாக அதை கவனித்துவிட்ட கயல்விழி பதறிப் போனாள் அவள் கண்ணீரை கண்டு "என்ன ஆச்சு மா ஏன் அழுகுற? அவன் திட்டுனான இல்ல அடிச்சிட்டானா? என்னனு சொல்லு நான் அவன்கிட்ட என்னன்னு கேட்கிறேன் எப்ப பார்த்தாலும் உன்னை ஏதாவது பண்ணிட்டே இருக்கணும் அவனுக்கு. உன்னை காயப்படுத்தலைன்னா அவனுக்கு தூக்கமே வராது என்ன ஆச்சு சொல்லு?" என்று அவள் பதட்டமாக கேள்விகளை அடக்கி கொண்டே செ...

பெண் கவிதை 46

"வாங்க மிஸ்டர் கரிகாலன் உங்களுக்காக தான் காத்துட்டு இருக்கேன் வாங்க வந்து உட்காருங்க" என்று 50 வயது மதிக்க தாக்க அந்த பெண் மருத்துவர் கரிகால் ஆரனை சிரித்த முகத்துடன் தன் அறைக்குள் வரவேற்க அதற்கு ஒரு சிறு தலை அசைப்பை மட்டும் கொடுத்துவிட்டு குழந்தை தூக்கி கொண்டு சென்று அவர் முன்பு இருந்த இருக்கையில் கம்பீரமாக அமர்ந்தான் ஆரன்  யட்சிணி மற்றும் யுதி அங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் அவன் பின்னே வந்து நிற்க "என்ன விஷயமா நீங்க என்கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கி இருக்கீங்க மொபைல்ல என்கிட்ட அப்பாயின்மென்ட் கேட்கும்போது விஷயம் என்னன்னு நீங்க தெளிவா சொல்ல நேர்ல வந்த பிறகு சொல்றேன்னு சொன்னீங்க சொல்லுங்க என்ன விஷயம் உங்களோட ஹெல்த் கண்டிசன் ஏதாவது செக் பண்ணனுமா? ஆமா யாரு இந்த குட்டி பையன்? இவன எதுக்கு தூக்கிட்டு வந்து இருக்கீங்க?" என்று அவர் புரியாமல் கேட்க அவர் கூறியதை கேட்டு தான் தொண்டையை சரி செய்து கொண்டவன் "இவன் என்னோட பையன் இவனை செக் பண்றதுக்காக தான் இங்க கூட்டிட்டு வந்து இருக்கேன் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை" என்றாம் அழுத்தமான குரலில். அவன் கூறியதை கேட்டு யட்ச...

பெண் கவிதை 45

"யுதி கார் ஓட பின்பக்க கதவை திறந்து விடு" என்று எப்பொழுது போல் கணீர் குரலில் ஆரன் கூற அவன் கூறியதை கேட்டு விழி விரித்து அவனை பார்த்தாள் யட்சிணி. எங்கே அவன் அருகே சென்று அமர்ந்தால் ஏதாவது கோபமாக கத்துவானோ என்று நினைத்தாள். ஒருவேளை முன் சீட்டில் ஏறி அமர்ந்தால் "இது என்ன உன்னுடைய காரா உன் இஷ்டத்துக்கு முன்னாடி போய் உட்காருற?" என்று திட்டுவானோ என்று அதுவும் பயமாக இருந்தது. இப்பொழுது அவனே அவன் அருகில் அமருமாறு கூறியதை கேட்டவளுக்கு ஆச்சரியமாக இருந்தது  வெளிவர துடித்த புன்னகையை அடக்கிக் கொண்டு பின்பக்க கார்கதவை யுதிஷ்டிரன் திறந்து விட தயக்கத்துடன் உள்ளே ஏறிய அமர்ந்தாள் யட்சிணி. குழந்தை அவள் மடியில் வாகாய் அமர்ந்து கொண்டு அவள் நெஞ்சில் சாய்ந்து கொள்ள தன் மகனை அவளிடம் இருந்து வாங்கினான் ஆரன். குழந்தையை வாங்கும் பொழுது அவனின் விரல் பெண் அவளின் விரலை உரச அதில் உள்ளுக்குள் சிலிர்த்து போனது மங்கைக்கு. என்ன விதமான உணர்விது என்று அவள் உணர்ச்சியின் தாக்கத்தில் அமைதியாக தலை குனிந்து அமர்ந்திருக்க தன் மகனை வாங்கி தன் மடி மீது அமர வைத்தவன் அவன் முகத்தை தடவினான் தன் வன்மை கரங்களால். கு...

பெண் கவிதை 44

காலை வேளையில் யட்சிணி தன் அறையில் இருந்து குளித்து முடித்து விட்டு வெளியே வந்தாப் வேலைக்கு கிளம்புவதற்காக. அன்று ஆரன் அவளை அனைத்து தன் மனக்குமுறலை வெளிப்படுத்தியவன் அதன் பின்பு அவளை கண்டுகொள்ளவே இல்லை. அவளோ அவனின் இந்த நிராகரிப்பில் பரிதவித்து போனாள்  குழந்தை ஆனால் அவளிடம் தான் இருந்தது.  வேகமாக குளித்து முடித்துவிட்டு வெளியே வந்தவள் குழந்தைக்கு பால் கலக்குவதற்காக சமையல் அறைக்குள் புகுந்தாள். எப்பொழுதும் கலகலப்பாக பெண்களின் சத்தத்துடன் இருக்கும் சமையலறை இப்பொழுதெல்லாம் அசாத்திய அமைதியால் சூழ்ந்திருந்தது ஒரு புறம் தியூதா  கடனே என சமைத்துக் கொண்டிருக்க கயல்விழி ஒரு புறம் அனைவருக்கும் காபி போட்டுக் கொண்டிருந்தாள் அவள் முகத்தில் வெறுமை சூழ்ந்திருப்பதை காண சகிக்கவில்லை இவளுக்கு  அவள் அருகே சென்றவள் "மேடம்" என்று மெல்லிய குரலில் அவளை அழைக்க ஏதோ நினைவில் நின்றிருந்தாள் பெண் அவள். அடுப்பில் பால் பொங்கி வழிவது கூட தெரியவில்லை அவளுக்கு. அதை கண்டு பதறிப்போன யட்சிணி வேகமாய் அடுப்பை அணைத்துவிட்டு "மேடம்" என்று அவளை போட்டு உலுக்கினாள்  அதில் சுயநினைவிற்கு வந்தவள் "என்ன என்ன ...

பெண் கவிதை 43

நாட்கள் இவ்வாறு சொல்ல மாதங்களாக உருண்டோடி இருந்தது.  நற்பவிக்கு இது ஒன்பதாவது மாதத்தின் முடிவு . இன்னும் அவள் கண் விழிக்கவில்லை அதே நிலையில் தான் இருந்தாள். ஆனால் அவள் வயிற்றில் இருந்த கருவோ அவளுக்கு எந்த தொந்தரவும் அளிக்காமல் நன்முறையில் வளர்ந்து கொண்டிருந்தது.  அவளை பார்த்துக் கொள்ளும் ஞானபிரகாசத்திற்கு மனம் கவலையாக இருந்தது அவளை நினைத்து.  அவருக்கு துணையாக அருகில் இருந்த வயது முதிர்ந்த மற்றொரு நாட்டு வைத்தியர் "ஐயா இந்த பொண்ணு இன்ன வரைக்கும் நினைவு திரும்பாமல் கிடக்கு இதுக்கு மேல நம்ம இப்படியே விடுவது சரியில்லை. வயித்துல குழந்தையோட வளர்ச்சி எல்லாம் சரியா தான் இருக்கு அதனால மருத்துவமனைக்கு கூட்டிட்டு போய் நம்ம டாக்டர் கிட்ட இந்த பிள்ளையை காட்டுவோம் அடுத்து அவர் என்ன சொல்றாருன்னு பார்ப்போம்" என்று அவருக்கு ஒரு அவரின் கூற்று ஏற்றுக்கொள்ளும் படியாக இருந்ததால் அதை ஏற்றுக் கொண்டார் ஞானப்பிரகாசம்.  அவரின் உதவியுடன் அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனையில் அவளை அனுமதித்தனர் அங்கு அவளை பரிசோதித்த மருத்துவர் "குழந்தையை ஆபரேஷன் பண்ணி தான் வெளியே எடுக்க முடியும் இதுக்கு மேல...

பெண் கவிதை 42

ஊர் பஞ்சாயத்து கூடிய இடத்திற்கு நற்பவியும் அவளுடன் அந்த செவிலியம் வந்தனர் அங்கு ஊர் தலைவரின் மகனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் தந்தை இருவரும் ஊர் தலைவரிடம் முறையிட்டுக் கொண்டிருந்தனர் கண்ணீருடன். "ஐயா உங்க பையன் பண்ணி இருக்கிறது மிகப்பெரிய பாவம் அவர் பண்ணது ரொம்ப ரொம்ப பெரிய அநியாயம் நீங்க தான்யா இதுக்கு ஒரு நியாயம் சொல்லணும். உங்க புள்ளையா இருந்துகிட்டு அவர் இப்படி பண்றது எவ்வளவு தப்பு என்று உங்களுக்கு நல்லாவே தெரியும் அதனால அவருக்கு சரியான தண்டனை என்ன கொடுக்கணுமோ அதை கொடுங்கள் ஐயா" என்று அந்த பெண்ணின் தந்தை கண்ணீருடன் கூற அந்த பெண்ணோ கூனிக்குறுகி கண்களில் கண்ணீருடன் தலை குனிந்து நின்று இருந்தாள் அங்கு  தவறு செய்த ஊர் தலைவரின் மகன் விருமாண்டியோ கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் திமிரான தோரணையுடன் நின்றிருந்தான். அங்கு நற்பவிக்கு அவனை பார்க்க பார்க்க கோபம் பொத்துக் கொண்டு வந்தது சிறுவயதில் இருந்தே அவன் கேடுகெட்ட செயல்களில் ஈடுபடுவான் என்பது அவளுக்கு தெரியும் இப்போதும் திருந்தாமல் ஒரு பெண்ணின் வாழ்வை அழித்துக் விட்டு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் இப்படி நிற்பவனை கண்டவளுக்கு அவனை க...