Posts

பெண்கவிதை 55

இரவு தாமதமாக வீட்டிற்குள் நுழைந்த ஆண்களை ஹால் சோபாவில் அமர்ந்திருந்த கயல்விழி தான் வரவேற்றாள். கைகளை கட்டிக்கொண்டு அவள் அமைதியாக ஹால் சோபாவில் தலை சாய்ந்து கண்களை மூடி அமர்ந்திருக்க தன் மனைவியை இந்நேரம் எங்கு எதிர்பாராத ஆரூரன் அவள் அருகே சென்றவன் "என்னாச்சு விழி இவ்வளவு நேரம் வரைக்கும் தூங்காம என்ன பண்ணிட்டு இருக்க?" என்று அவள் அருகே சென்று அவள் தோள்மேல் தன் கரம் வைத்து  கேட்க அவன் குரல் கேட்டு வேகமாய் கண் விழித்தவள் அப்பொழுதுதான் அனைத்து ஆண்களையும் கண்டாள்  "என்ன எல்லாரும் இவ்ளோ லேட்டா வீட்டுக்கு வரீங்க நீங்க வருவீங்க வருவீங்கன்னு எதிர்பார்த்துட்டு இருந்தேன் காலையில பங்க்ஷன் முடிஞ்சு அப்படியே வெளிய கிளம்பினவங்க இப்பதான் வரீங்க எங்க போயிட்டு வரீங்க எல்லாரும்?" என்று அவள் கோபமாய் கேட்க அதில் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் அனைவரும் தடுமாறி நிற்க ஆரூரன் மட்டுமே தன் மனைவியை கையாளும் வித்தையை அறிந்தவன் என்பதால் "அது ஒன்னும் இல்லம்மா ஒரு முக்கியமான பிசினஸ் மீட்டிங் நாங்க எல்லாருமே அதுல கலந்துக்க வேண்டிய சிச்சுவேஷன். ஏன்னா நம்ம கம்பெனியோட எம்டி நான் கண்டிப்பா இருக...

பெண்கவிதை 54

ஆரன் யட்சிணியிடம் நீதான் குழந்தைக்கு தாய் அதனால நீ தான் பெயர் வைக்க வேண்டும் என்று அவளிடம் கூற அவன் கூறியதை கேட்டு அவனை அதிர்ந்து பார்த்தாள் யட்சிணி "நான் எப்படி குழந்தைக்கு பேர் வைக்கிறது அதெல்லாம் வேண்டாம் நீங்களே வைங்க" என்று அவள் அவசரமாக கூற "மாயா உன்ன நான் நேம் வையினு சொன்னேன் சும்மா சும்மா என்ன திரும்பி பேச வைக்காத ஒழுங்கா குழந்தைக்கு பேர் வை" என்று மீண்டும் அழுத்தமான குரலில் ஆரன் கூற அதற்கு மேல் அவனை எதிர்த்துப் பேச முடியாமல் அமைதியானவள் அப்படியே நின்றிருந்தாள்  வீட்டில் இருந்த அனைவருக்கும் ஏதோ போல் ஆகியது அவளின் அமைதி. "என்னம்மா அவன் இவ்வளவு சொல்றான் நீ அமைதியா நிக்கிற ஏன் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கிறது என்று நீ எதுவும் யோசிச்சு வைக்கலையா?" என்று ஆருத்ரன் கேட்க "அது வந்து மாமா பேர் என்னனு செலக்ட் பண்ணி வச்சிருக்கேன் ஆனா அது உங்க எல்லாருக்கும் பிடிக்குமான்னு எனக்கு தெரியலையே" என்று அவள் அப்பாவியாக கூற அவள் கூறியதை கேட்டு அனைவருக்கும் சிரிப்பாக இருந்தது  "குழந்தையோட அம்மா அப்பா நீங்கதான். அவனுக்கு என்ன பெயர் வைச்சு நல்லா இருக்கும்னு ...

பெண்கவிதை 53

இன்று கரிகால் ஆரன் மற்றும் மாய யட்சிணியின் பிள்ளைக்கு பெயர் சூட்டு விழா ஆம் இப்பொழுது மாய யட்சிணி தான் குழந்தையின் தாய். நற்பவி குழந்தையை ஈன்றெடுத்தவளாக இருந்தாலும் குழந்தையின் தாயாக அந்த இடத்தில் பாவிக்கப்படுபவள் யட்சிணி மட்டுமே. ஏனெனில் தான் பெற்ற குழந்தை போல் அவள் குழந்தையை அரவணைப்பதிலும் பார்த்துக் கொள்வதிலும் அங்கிருந்து அனைவருக்கும் அவள் தான் குழந்தையின் தாய் என்று மனதிற்குள் பதிந்து விட்டது  காலை வேளையிலேயே வீட்டில் அனைவரும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர் வெளியிலிருந்து ஆட்களை வரவழைக்கவில்லை என்றாலும் விசேஷம் என்று வரும்பொழுது வீட்டிற்குள் எப்பொழுதும் ஒரு பரபரப்பு இருக்கத்தான் செய்யும். அதேபோல்தான் இப்பொழுது அனைவரும் பெயர் சூட்டு விழாவிற்கான ஏற்பாடுகளில் மும்மூரமாக இருந்தனர் அனைவரும் ஒவ்வொரு வேலையை செய்து கொண்டிருக்கும் பொழுது வீட்டையே ஒருவழியாக்கிக் கொண்டிருந்தான் ஆரன் புதல்வன். தத்தி தத்தி இப்பொழுதுதான் நடைபழகி இருப்பதால் அங்குமிங்கும் தத்தி தத்தி நடந்து சென்று அடுக்கி வைத்திருந்த பொருட்களை எல்லாம் உடைத்து கீழே தள்ளிக் கொண்டிருந்தான் குழந்தை.  இன்னும் ஆரன் கீழே ...

பெண்கவிதை 52

விருஷாலி தன் அறைக்குள் சென்று பால்கனியில் நின்று சுற்றி முற்று வேடிக்கை பார்க்க துவங்கிய விட பால்கனி கதவில் சாய்ந்து நின்று அவளைத்தான் விழி சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் துரியன். அவனுக்கு அவளை பார்க்கும் பொழுது உள்ளுக்குள் ஏதேதோ உணர்வுகள் பீரிட துவங்கியது ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்க பெரும்பாடு பட்டுக் கொண்டிருந்தான் ஆனவன்  "என்ன சார் என்னை மறந்துட்டீங்க போல இல்ல ஞாபகம் இருந்தும் மறந்த மாதிரி நடிக்கிறீங்களா?" என்று அவள் அவன் புறம் திரும்பாது வெடிக்கக் பார்த்த வண்ணம் கேட்க அவள் கேள்வியில் திடுக்கிட்டு விழித்தான் துரியன் "என்...ன என்னது என்ன...மா சொ...ல்ற நீ எனக்கு புரியலையே?" என்று அவன் தட்டு தடுமாறிய குரலில் கேட்டான் எங்கே அவளுக்கு ஒரு வேலை தன்னை அன்று பார்த்தது நினைவிற்கு வந்து விட்டதோ என்ற எண்ணத்தில்  "பரவால்ல நல்லா நடிக்க கூட செய்றீங்க எதுக்காக இந்த நடிப்பு? ஒருவேளை கடைசி வரைக்கும் என் கிட்ட எதுவுமே தெரியாத மாதிரி நடிக்கணும்னு நினைக்கிறீங்களா? இல்ல இப்ப சொல்றதுக்கானநேரம் இல்ல என்னைக்காவது ஒருநாள் சொல்லிக்கொள்ளலாம் என்று நினைக்கிறீங்களா?...

பெண்கவிதை51

"எனக்கு அவரை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் நான் வர கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று ஆளுக்கு முன்பாக நின்று கத்தின விருஷாலி. அவளின் செயலில் அவள் தாய் தந்தையான யஷ்விகா மற்றும் ரோகன் இருவரும் தலையில் அடித்துக் கொண்டனர்  "ஏண்டி வெக்கம் மானம் சூடு சொரணை ஏதாவது உனக்கு இருக்காடி? ஆம்பள புள்ள அவனே உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம்னு தயக்கப்பட்டு நிற்கிறான் நீ என்னடான்னா வெக்கமே இல்லாம இப்படி பேசுற" என்று வேண்டுமென்றே தன் மகளை வம்பு இழுத்தாள் யஷ்விகா. அவளுக்கு மனதுக்குள் சந்தோஷமாகத்தான் இருந்தது தன் மகள் வெளிப்படையாகவே தைரியத்துடன் திருமணத்திற்கு விருப்பம் தெரிவித்ததை  கண்டு "அம்மா இதுல வெட்கப்படுவதற்கு என்ன இருக்கு எப்படி இருந்தாலும் அவர்கிட்ட கேட்கிற மாதிரி என்கிட்டயும் தானே விருப்பம் இருக்கான்னு கேட்பீங்க அதனால தான் என்னோட விருப்பத்தால முன்னாடியே சொல்லிட்டேன். நான் ரொம்ப அறிவாளி அப்புறம் தைரியசாலி ம்மா அதனாலதான் நீங்க கேக்குறதுக்கு முன்னாடியே நானே வந்து சொல்லிட்டேன்" என்று அவள் பெருமையாக கூறுவது போல் கூட தன்னவளை விழி சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் துரியன். உள்ளுக்...

பெண் கவிதை 50

துரியன் ரோகனை கண்டவுடன் பயத்தில் எழுந்து நின்று விட்டான் ரோகன் என்ன கூறுவானோ என்று உள்ளுக்குள் பயம் நொடிக்கு நொடி அதிகமாகிக் கொண்டே சென்றது துரியனுக்கு. ரோகனோ அழுத்தமான காலடிகளை ஊன்றி அறைக்குள் நுழைந்தவன் நேராக ஆருரன் முன்பு வந்து நின்றான்  விழிகள் சிவக்க கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்ட ஆரூரனயே ரோஹன் உறுத்து விழித்துக் கொண்டிருக்க வித்யூத் "டேய் கோவப்பட்டு எதுவும் பேசிடாத அவன் எது பண்றதா இருந்தாலும் யோசிச்சு தான் பண்ணுவான் முதல்ல எதுக்காக இவன் இப்படி ஒரு முடிவு எடுத்துருக்கான்னு நம்ம அவன்கிட்ட பொறுமையா கேப்போம் டா அவன் நம்மளோட நண்பன் அதை மறந்துடாத" என்று இங்கு ரோஹன் மகள் வாழ்வில் முடிவெடுப்பதற்கு இவன் யார் என்று ஆரூரனை ஏதாவது பேசி விடுவானோ என்ற பயத்தில் அவனிடம் வித்யூத்  கூற"வாய மூடுடா இடியட்" என்று கத்தினான் ரோகன் அதில் மேலும் பயந்து போனான் வித்யூத் இனி இவனை தன்னால் கூட அடக்கிய இயலாது என்று இயலாமையுடன் அவன் தன் நண்பனை பார்க்க ஆரூரன் புறம் திரும்பிய ரோகன் "துரியன் கிட்ட விருப்பத்தை கேளு சீக்கிரமா அப்பதான்  பொண்ணோட கல்யாண வேலையை ஆரம்பிக்க முடியும்" ...

பெண் கவிதை 49

துரியன் வெளியே நிற்பதை கண்ட ஆருத்ரன் "உள்ள வா துரியா ஏன் அங்கேயே நிக்கிற எவ்வளவு நேரமா அங்கேயே நின்னுட்டு இருக்க நீ.  வந்தா உள்ள வர வேண்டியதுதானே?" என்று அவன் பாட்டிற்கு பேசிக்கொண்டே செல்ல அவன் சத்தத்தில் தான் அனைவரும் துரியன் புறம் திரும்பினர்  அவனோ நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் உணர்ச்சிவசப்பட்டு ஆனந்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். இந்த நிகழ்வு நடக்க வேண்டும் என்பதற்காகத்தானே ஆரனது வாழ்விற்குள் யட்சிணிஐ கொண்டு வந்தார் ஆரூரன். இப்பொழுது அது நடந்து விட்டது என்று எண்ணி பார்க்க அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது அவனுக்கு தன் தங்கை போல் பாவிப்பவளின் வாழ்க்கை இனி நன்றாக இருக்கும் என்று அவன் எண்ணியிருக்க அந்த எண்ணத்தில் மண்ணை வாரி போடப் போகிறாள் யட்சிணி என்று அப்போது அறியவில்லை துரியன்  ஆருத்ரன் கூறியதை கேட்டு சிரிப்புடன் வீட்டிற்குள் நுழைந்த துரியன் "இல்ல சார் நீங்க எல்லாரும் பேசிகிட்டு இருந்தீங்க அதான் உங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் வெளியவே நின்னுட்டேன்" என்று அவன் கூற "நீ இந்த குடும்பத்துல ஒருத்தன் தான். இப்படி யாரோ மாதிரி உள்ள வர்ரத்துக்கே யோசித்துக்கொண்டு நிற்க வேண...