Posts

Showing posts from July, 2025

பெண் கவிதை 65

"உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும் ப்பா" என்று ஆரன் ஆரம்பிக்க தன் மகன் என்ன கூற போகிறான் என்று அவன் முகத்தை நான் பார்த்துக் கொண்டிருந்தான் ஆரூரன். அடுத்ததாக ஆரன் கூறிய வார்த்தைகளில் ஒரு நிமிடம் தன் காதல் கேட்டு செய்து உண்மைதானா என்னும் வகையில் விழிகளை விரித்துவிட்டான் ஆரூரன் " டேய் நீ சொல்றது உண்மையா? நிஜமாவே நீ இதுக்கு ஒத்துக்கிட்டியா?" என்று அவன் ஆச்சரியமாக கேட்க அதில் தன் தந்தையை எண்ணி ஒரு சிறு புன்னகை பூத்த ஆரன் "ஆமாப்பா நான் சொல்றது உண்மைதான். எனக்கு ஐ ஆபரேஷன் பண்ணிக்கிறதுல விருப்பம் இருக்குப்பா நீங்க அதுக்கான ப்ராசஸ ஸ்டார்ட் பண்ணுங்க" என்று அழுத்தமான குரலில் ஆரன் கூற தன் மகனை நம்பாமல் பார்த்தான் ஆரூரன்  "நிஜமாவே சொல்றியா? இவ்வளவு நாள் நான் கெஞ்சிக்கிட்டு இருந்தன் அப்பெல்லாம் நீ வேண்டாம் வேண்டான்னு சொல்லிக்கிட்டு இருந்த. இப்ப நீயே வந்து இப்படி பேசுற என்னடா உண்மைய தான் சொல்றியா இல்ல சும்மா எதாவது விளையாடுறியா?" என்று மீண்டும் ஒருமுறை கேட்டான். ஆனால் உள்ளுக்குள் யட்சிணியின் செயலால் தான் இவன் இவ்வாறு வந்து கேட்கிறான் என்று நன்றாக புரிந்தது  தன் தந்த...

பெண் கவிதை 64

ஆரன் ஞானப்பிரகாசத்தில் அருகே நின்று அவர் என்ன கூறப் போகிறார் என்று கேட்பதற்காக தன் கவனத்தை முழுவதும் அவர் மீது வைத்திருந்தான் அவரோ தயங்கியவாரே நின்று இருக்க ஒரு அளவிற்கு மேல் பிடிக்காமல் "அய்யா என்ன விஷயம்னு சொல்லுங்க இப்படி அமைதியா நிற்கிறதுனால எனக்கு தான் நேரம் வீணா போகுது" என்று அவன் பேச அதில் தன்னை ஒருவராக சமன் செய்து கொண்டு அவனை நோக்கியவர் "நீங்க இன்னும் நற்பவியத்தான் நினைச்சுகிட்டு இருக்கீங்களா தம்பி?" என்றார் தயக்கத்துடன்  அவர் கூறியதை கேட்டு புரியாமல் குழம்பியவன் "நற்பவியைத்தான் நினைச்சிட்டு இருக்கியான்னு கேட்டா என்ன அர்த்தம்? இந்த கேள்வியே முதல்ல தப்பா இருக்கு ஐயா அவளை நான் நினைக்காம இருந்தா தான் தப்பு அவ என்னோட உயிரோட கலந்தவ அவள எப்படி நான் நினைக்காமல் இருப்பேன்" என்று இவன் கோபமாக கேட்க "இல்ல தம்பி அது தப்பு இனிமே நீங்க அந்த புள்ளயை நினைக்கிறது உங்களையே நம்பி உங்களுக்கு கழுத்தை நீட்டி இருக்கிற இந்த பொண்ணுக்கு துரோகம் பண்ற மாதிரி ஆகிவிடும்"  என்றார் அவர் கைகளை பிசைந்து கொண்டு மெல்லிய குரலில். அதில் முதலில் புரியாமல் குழம்பியவன் பின்பு அவ...

பெண் கவிதை 63

ஞானபிரகாசத்தின் ஆசிரமத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரு குடிலின் வெளியே இருந்த கல்லில் அமர்ந்து இருந்தான் ஆரன் அந்த இரவு வேளையில் குளுமை காற்று உடலை துளைக்காத வகையில் நெருப்பு மூட்டப்பட்டிருந்தது கட்டைகள் அடுக்கி  அவன் முன்பு. சுற்றிலும் அவனை அனல் காற்று தழுவி இருக்கு அதற்கு மேல் அவன் நெஞ்சம் அனலில் இட்ட புழுவாய் துடித்துக் கொண்டிருந்தது . அங்கு ஆசிரமத்தில் இருந்தவர்கள் ஒன்று குடிசையிலான வீட்டில் இருப்பார்கள் அல்லது இதுபோன்ற குடிலில் தான் இருப்பார்கள் அந்த ஆசிரமம் முழுவதும் ஞான பிரகாசத்தில் தலைமையில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது அவர்களின் முக்கிய வேலையே மூலிகை மருந்துகள் தயாரித்து அதன் மூலம் உடல் உபாதைகளை தடுப்பதே ஆகும் அமைதியாக அந்த கல்லில் அமர்ந்து நற்பவியின் நினைவுகளில் மூழ்கியிருந்தான். எப்படி எல்லாம் காதலித்தோம் அதுவும் அன்று இரவு இருவரும் உடலால் மட்டும் இன்றி மனதால் தங்கள் காதலை பரிமாறிக் கொண்டதில் இப்பொழுதும் நினைவிற்கு வந்தது ஆரனுக்கு அதில் அவன் கண்களின் ஓரம் கண்ணீர் துளிர்க்க அவன் இதழ்களோ விரக்தியில் புன்னகைத்தது அந்நேரம் அவன் கண்ணீரை துடைத்து விட்டது ஒரு மென்மையான கரம் அந்த க...

பெண் கவிதை 61

ஞானப்பிரகாசம் ஆசிரமத்தின் வெளியே வாசலிலே வந்து யட்சிணி ஆரன் மற்றும் துரியன் மூவரையும் வரவேற்றார் யட்சிணியின் கரங்களில் அமர்ந்து தன்னையே ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருந்த கர்ணனை பார்த்தவுடன் அவன் மீது உள்ள பாசம் பொங்கி வழியே அவரின் நிலை உணர்ந்து யட்சிணியும் அவர் கரத்தில் கர்ணனை கொடுத்தாள். அவன் தன் கைவந்து சேர்ந்தவுடன் அவன் கண்ணம் கண்ணமாய் முத்தம் வைத்து கொஞ்சி தள்ளிவிட்டார் ஞானபிரகாசம் . குழந்தையும் அவரோடு நன்றாக ஒன்றி கொண்டான் அவருடனே அவ்வளவு நாட்கள் இருந்ததால் எளிதில் அவரிடம் ஒன்ற முடிந்தது அவனால்.  "தங்கம் ராஜா எப்படிடா இருக்க அப்பு? உன்னை பார்த்து எவ்வளவு நாள் ஆகுது இந்த தாத்தாவை மறந்துட்டியா? என்ன பத்தி உனக்கு ஞாபகம் இல்லையா?" என்று கண்களில் ஓரம் துளித்த கண்ணீருடன் அவன் முகத்தை தடவியவாறு அவர் நெகிழ்ந்து பேச அவர் கழுத்தை கட்டிக்கொண்டு அமைதியாக அவர் தோளில் சாய்ந்து விட்டான் கர்ணன். அவனின் அணைப்பில் தன் மனம் துயர் சற்று தகர்த்தெறிந்தவர் "வாங்க தம்பி வாமா உள்ள வாங்க எல்லாரும்" என்று அவர்களை உபசரித்து உள்ளே அழைத்துச் சென்றார்.  ஆரனுக்கு அந்த இடத்திற்குள் நுழையும் பொழு...

பெண்கவிதை 62

இரவு உணவு வேலையின் பொழுது அனைவரும் டைனிங் டேபிள் அருகே அமர்ந்து உணவு உண்டு கொண்டிருக்க அப்பொழுதுதான் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான் ஆரன் அவன் பின்னே யுதியும் வர "என்ன ரெண்டு பேரும் இவ்வளவு லேட்டா வரீங்க ஏன்டா யுதி கல்யாண மாப்பிள்ளை நீதான். இப்படி அவன் கூட சேர்ந்து நீயும் வேலை பாக்குறேன் அது இதுன்னு ஊர சுத்திட்டு இருக்க கொஞ்சமாவது ரெஸ்ட் எடுக்கணும்னு உனக்கு தெரியாதா? கல்யாண நெருக்கத்தில் இப்படி எல்லாம் வேலை இழுத்து வச்சு செஞ்சுட்டு இருக்காதடா "என்று உணவு உண்டு கொண்டே உள்ளே வந்தவர்களிடம் ஆரூரனுக்கு கூற "இல்ல மாமா ஆரன் மாமாவுக்கு கூட துணைக்கு தான் போன. மத்தபடி மாமா எனக்கு எந்த வேலையும் வைக்கல தனியா அவரை எப்படி விடுறது" என்று அவன் கூறியவரே சோர்வாக அவன் அருகே இருந்த இருக்கையில் அமர "ஆமா நீங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ் அவனுக்கு துணையா நீ போறியா? ஏன்டா அவனால எல்லா வேலையும் தனியா பார்க்க முடியாதா?" என்று கயல்விழி கூற அதைக் கேட்டு அனைவரும் வாய்விட்டு சிரித்து விட்டனர்  தான் மொக்கை வாங்கியதை உணர்ந்து அனைவரையும் முறைத்தவன் "ஆமா நாங்க ரெண...

பெண் கவிதை 60

குழந்தையின் குரல் கேட்ட ஆரனுக்கு கால்கள் தன் வலுவை இழந்தது போல் ஆக அப்படியே மண்டியிட்டு சோர்ந்து அமர்ந்து விட்டான். ஆனவன் அவளின் நிலை உணர்ந்து வேகமாய் அவள் அருகே குழந்தையுடன் ஓடிய யட்சிணி அவனைத் தாங்கிக் கொண்டாள் . ஒரு தோழமையுடன் அவளை அணைத்துக் கொண்ட ஆரனுக்கு தன் மகனின் குரலை கேட்டு அதுவும் தன்னை அப்பா என்று அழைத்த மகனின் குரலை கேட்டு கண்களின் ஓரம் கண்ணீர் துளிர்தது. அவன் கண்ணீரை கண்டு இவளும் உள்ளுக்குள் வேதனை கொண்டவள் தன் கரம் கொண்டு அவன் கண்ணீரை துடைத்துவிட்டு "அழாதீங்க அவன் எவ்வளவு அழகா அப்பான்னு உங்கள கூப்பிடுறான் அவனை கொஞ்சரத விட்டுட்டு இப்படி அழுதுட்டு இருக்கீங்க" என்று அவள் அழுகையுடன் கூற அதில் தன்னிலை உணர்ந்தவன் அவளிடம் இருந்து விலகி தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு காற்றில் கைகளை தூலாவி தன் மகனைத் தேட அவன் கரங்களுக்குள் புகுந்து கொண்டான் அவன் மகன் பாய்ந்து சென்று யட்சிணியிடம் இருந்து.  தன்னிடம் அடைக்கல புகுந்த தன் மகனை தன்னுடைய இறுக்குமாய் அனைத்து அவன் கண்ணம் கண்ணம்மாய் முத்தம் வைத்து விட்டான் . இதுவரை இவ்வளவு குழந்தைகளிடம் நெருக்கமாக அவன் இருந்ததில்லை இன்று ஏனோ அவன் கு...

பெண் கவிதை 59

"நான் உன்கிட்ட சில விஷயங்களை தெளிவா சொல்லணும்னு நினைக்கிறேன் நான் சொல்றதெல்லாம் கேக்குறதுக்கு உனக்கு விருப்பம் இருக்கா?" என்று கேட்ட ஆரன் குரலில் நான் கூறுவதை நீ கேட்டே ஆக வேண்டும் என்ற கட்டளை இருந்தது. அதை உணர்ந்து கொண்ட யட்சிணி "கேப்ப சார் சொல்லுங்க" என்றாள் மெல்லிய குரலில் தலை குனிந்து  அதில் ஒரு பெரும் மூச்சை ஒன்றை விட்டவன் தன் தலையை ஒரு முறை அழுத்தமாய் கோதிக்கொண்டு அவனை அழுத்தமாய் பார்த்தான். "முதல் விஷயம் நீ தான் கர்ணனுக்கு அம்மா அது எப்பவும் மாறாது புரியுதா?" என்று ஆரன் கூற அவன் கூறியதைக் கேட்டவளுக்கு உள்ளுக்குள் ஆனந்த அதிர்ச்சியாக இருக்க தான் காதால் கேட்ட செய்தி உண்மைதானா என்ற நோக்கில் மீண்டும் அவன் முகத்தை நிமிர்த்து பார்த்தால்ள். அவளின் எண்ணத்தை உறுதியாக்கும் வகையில் "நான் இப்ப சொன்ன விஷயம் உனக்கு அதிர்ச்சியா தான் இருக்கு மாயா பட் இதுதான் உண்மை நீதான் கர்ணனுக்கு இனி அம்மா அது எப்பவும் மாறாது. ஆனால் இன்னொரு விஷயத்தையும் நான் உன்கிட்ட சொல்லுக்கணும்னு நினைக்கிறேன்" என்று அவன் கூறும் பொழுது அடுத்து இவன் என்ன கூறுவானோ என்று உள்ளுக்குள் பதட்ட...

பெண் கவிதை 58

இரவு வேலை கர்ணனை பால் கனியில் நின்றவாறு தன்னிடுப்பில் அமர்த்தி கொண்டு சுற்றி முற்று வேடிக்கை காட்டிக்கொண்டே உணவை ஓட்டிக் கொண்டிருந்தாள் யட்சிணி குழந்தை காலையில் பேசியதோடு சரி இப்பொழுது வரை ஒரு வார்த்தை வாயை திறந்து பேசவில்லை ஆனால் காலையில் இருந்து யட்சணியிடம் தான் ஒட்டிக் கொண்டிருக்கிறான். இடையில் வந்து ஆருரன் கூட அவனை வெளியே அழைத்துச் செல்வதற்காக அழைக்க அவனோ வரமாட்டேன் என்று முரண்டு பிடித்து தன் தாயுடனே ஒட்டிக் கொண்டு திரிகிறான்  காலையில் அவள் தன்னை விட்டு விலகி சென்றதிலிருந்து பயத்தில் இருந்தவன் மீண்டும் எங்கே அவள் தன்னை விட்டு சென்று விடுவாளோ என்ற பயத்திலேயே அவளை விடவில்லை குழந்தையின் பயத்தை உணர்ந்து யட்ணியும் அவனை யாரிடமும் கொடுக்காமல் தன்னுடனே வைத்துக் கொண்டாள் ஆனால் மனம் காலையில் இருந்து துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறது. காலையில் கோபமாக வீட்டை விட்டு வெளியே சென்று ஆரனை இதுவரை காணவில்லை வீட்டிற்கும் அவன் வரவில்லை  எங்கே தான் சென்றான் என்று தெரியவில்லையே என்று உள்ளுக்குள் பரிதவிப்பு இருந்தாலும் குழந்தையின் நலனில் அக்கறை எடுத்துக் கொண்டு அவனைத் தான் கண்ணும் கருத்துமாக பா...

பெண் கவிதை 57

துரியன் யட்சிணியை கோபமாய் வீட்டிலிருந்து இழுத்துக் கொண்டு வெளியே செல்ல முற்பட அப்பொழுது யட்சிணியை தடுத்து நிறுத்தியது ஒரு பிஞ்சு மழையின் "ம்மா" என்ற குரல். அந்த குரலில் அப்படியே அனைவரும் திகைத்துப் போயினர் என்றால் யட்சிணிக்கோ தான் காதால் கேட்ட குரல் உண்மைதானா என்று நெஞ்சமே துடித்தது  துரியன் அப்படியே நடையை நிறுத்தியவன் திரும்பி யட்சினியை பார்க்க அவளோ தலை குனிந்து கண்ணீருடன் நின்றிருந்தவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவன் இன்னும் அதிர்ச்சி விலகாமல் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன் திரும்பி ஆரன் கரங்களில் இருந்த கர்ணனை நோக்கினான் யட்சிணிக்கு தன் மகன்தான் தன்னை அம்மா என்று அழைத்தானா என்று இன்னும் சந்தேகமாகவே இருக்கவே கண்களில் கண்ணீர் வடிய துடித்தடிக்கும் இதயத்துடன் திரும்பி தன் மகனை நோக்கியவள் குழந்தை தன் முகத்தையே விழியாகற்றாமல் கண்களில் கண்ணீர் வடிய பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு நெஞ்சம் துடித்து போனது  அவளை நோக்கி கரத்தை நீட்டி உடலை முன்பக்கமாக வளைத்த கர்ணனோ "ம்மா" என்றான் மீண்டும் பிஞ்சு மொழியில். அம்மா என்ற உச்சரிப்பு வாயில் வரவில்லை என்றாலும் முயற்சி செ...

பெண் கவிதை 56

விடியல் கரிகால் ஆரன் மற்றும் யட்சிணியின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும் விடியலாக விடிந்தது. காலையில் அனைவரும் எழுந்து தங்கள் வேலைகளை செய்து கொண்டிருக்க யட்சிணி கீழே தன் அறையில் இருந்து கையில் தன் உடைமைகளுடன் வெளியே வந்தாள். அவளை கண்ட அனைவரும் அதிர்ந்து போயினர். கயல்விழி தன் கணவனுக்கு உணவு பரிமாறுவதற்காக அனைத்து உணவுப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு வந்து டைனிங் டேபிளில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தவள் யட்சிணியின் வருகையை கண்டு அதிர்ந்தவாறு அவள் அருகி சென்றாள் "யட்சிணி என்னமா இது?" என்று அவள் அதிர்ச்சியாக கேட்க அவளை பார்த்து  விரக்தியாக ஒரு புன்னகையை உதட்டில் தவழவிட்ட பெண்ணவள் ஹால் சோபாவில் அமர்ந்திருந்த ஆரூரன் முன்பு சென்று நின்றாள் அவனோ அவளை தான் அழுத்தமாய் பார்த்துக் கொண்டிருந்தான் தன் பார்வையை மாற்றாமல். ஆனால் அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் கீழே குனிந்தவள் "நீங்க சொன்ன மாதிரி உங்க பையனா உங்க குடும்பத்தோட சேர்த்து வச்சிட்டேன் சார் இதுக்கு மேல எனக்கு இங்க எந்த வேலையும் கிடையாது நான் இங்கிருந்து போறேன்" என்று அவள் மெல்லிய குரலில் கூற அவள் கூறியதை கேட்டு அ...